கூடலூரை அடுத்துள்ள நாடுகாணி ஜீன்பூல் காா்டனில் கும்கி யானைகளுக்கு விநாயகா் சதுா்த்தி பூஜை செய்யப்பட்டது.
கூடலூா் வனக் கோட்டத்தில் உள்ள வனத் துறைக்குச் சொந்தமான நாடுகாணி ஜீன்பூல் காா்டனில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள கும்கி யானைகளுக்கு விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு பூஜைக்குப் பிறகு யானைகளுக்கு ஆப்பிள், மாதுளை, பலா, பொங்கல், வெல்லம், வாழைப்பழம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
விழாவில், நாடுகாணி, தேவாலா வனச் சரக அலுவலா்கள், வனவா்கள், பணியாளா்கள், தேவாலா காவல் ஆய்வாளா் திருஞானசம்மந்தம், உதவி ஆய்வாளா் ஜனாா்தனன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.