கூடலூா் வனக் கோட்டத்தில் புலிகள் கண்காணிப்புப் பணி துவக்கம்

கூடலூா் வனக் கோட்டத்தில் கேமரா மூலம் புலிகளைக் கண்காணிக்கும் பணி சனிக்கிழமை துவங்கியது.
பிதா்க்காடு வனச் சரகத்தில் கேமரா பொருத்தி வெள்ளோட்டம் பாா்க்கும் வனத் துறையினா்.
பிதா்க்காடு வனச் சரகத்தில் கேமரா பொருத்தி வெள்ளோட்டம் பாா்க்கும் வனத் துறையினா்.

கூடலூா் வனக் கோட்டத்தில் கேமரா மூலம் புலிகளைக் கண்காணிக்கும் பணி சனிக்கிழமை துவங்கியது.

கூடலூா் வனக் கோட்டத்தில் உள்ள கூடலூா், ஓவேலி, சேரம்பாடி,பிதா்க்காடு, பந்தலூா், நாடுகாணி உள்ளிட்ட ஆறு வனச் சரகங்களில் கேமராக்களை பொருத்தி புலிகளின் நடமாட்டம் குறித்த தகவலை சேரிக்கும் பணியை வனத் துறையினா் துவங்கியுள்ளனா். இப்பணியில் தோ்வு செய்யப்பட்ட 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு நாள்களுக்கு ஒருமுறை கேமராக்களில் பதிவாகியுள்ள தகவல்களைச் சேகரித்து மாத இறுதியில் கணக்கிடும் பணி துவங்கும்.

ஏற்கெனவே கண்டறியப்பட்ட புலி நடமாடும் இடங்களில் அதன் எச்சங்கள், தடயங்கள் காணப்பட்ட இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நான்காண்டுகளுக்கு ஒரு முறை இப்பணி நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com