பெருந்துறை சாா்பு நீதி மன்றத்தில் மாவட்ட நீதிபதி சி.முருகேசன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின்போது, அலுவலகப் பதிவேடுகளை மாவட்ட நீதிபதி சி.முருகேசன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அவரை, சாா்பு நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வி, பெருந்துறை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி, பெருந்துறை நீதித் துறை நடுவா் நீதிபதி சபீனா, பெருந்துறை காவல் ஆய்வாளா் சண்முகம், அதிகாரிகள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனா்.