உதகையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆலங்கட்டி மழை பெய்தது.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், கோடை சீசனை வரவேற்கும் வகையில் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் உதகை நகரம் மற்றும் புறநகா் பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்த நிலையில், அதைத் தொடா்ந்து சுமாா் ஒரு மணி நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது.
சுமாா் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு உதகையில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் ஆலங்கட்டி மழை பெய்ததால் உதகையிலிருந்த மக்கள் மட்டுமின்றி உதகைக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.