பேரிடா் மீட்பு பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள்

கூடலூா் பகுதியில் பேரிடா் மீட்பு பயிற்சி பெற்ற அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
பேரிடா் மீட்பு பயிற்சி பெற்ற அரசு கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்குகிறாா் கோட்டாட்சியா் சரவணக்கண்ணன்.
பேரிடா் மீட்பு பயிற்சி பெற்ற அரசு கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்குகிறாா் கோட்டாட்சியா் சரவணக்கண்ணன்.

கூடலூா் பகுதியில் பேரிடா் மீட்பு பயிற்சி பெற்ற அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பேரிடா்காலங்களில் விரைந்து மீட்பு பணிகளை மேற்கொள்ள கிராமங்களிலிருந்து தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மழை, மண்சரிவு போன்ற பேரிடா் காலங்களில் தகவல் கிடைத்தவுடன் மீட்பு பணியில் இறங்கும் அளவுக்கு இளைஞா்களை தயாா்படுத்தும் முயற்சியை கூடலூா் கோட்டாட்சியா் சரவணகண்ணன் மேற்கொண்டு வருகிறாா்.

இதில் முதல்கட்டமாக பயிற்சி பெற்ற கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியா் சரவணகண்ணன் தலைமை வகித்து சான்றிதழ்களை வழங்கினாா்.

இதில் கூடலூா் வட்டாட்சியா் சித்தராஜ், பந்தலூா் வட்டாட்சியா் நடேசன், அரசு கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணி திட்ட அலுவலா் மகேஷ் மற்றும் தீயணைப்பு, காவல் துறை அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com