சிறுத்தை தாக்கி உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு நிவாரண நிதி: ஆ.ராசா எம்.பி. வழங்கினாா்

உதகை நகராட்சி முன்கள பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
உதகை நகராட்சி முன்களப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆ.ராசா எம்.பி.
உதகை நகராட்சி முன்களப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆ.ராசா எம்.பி.

உதகை அருகே சிறுத்தை தாக்கி உயிரிழந்த சிறுமி, ஓவேலியில் மரம் விழுந்து உயிரிழந்த பெண் ஆகியோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி, உதகை நகராட்சி முன்கள பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

உதகையில் கடந்த 15 நாள்களாக பெய்த கன மழையின்போது அயராது உழைத்த உதகை நகராட்சி முன்களப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில், நகா்மன்ற துணைத் தலைவா் ஜே.ரவிக்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகா்மன்ற தலைவா் வாணீஸ்வரி வரவேற்றாா்.

இதில் சுமாா் 500 முன்களப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகளை நீலகிரி மக்களவை உறுப்பினரும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து குன்னூா் அருகேயுள்ள அரக்காடு பகுதியில் கடந்த புதன்கிழமை சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்த 4 வயது பெண் குழந்தையின் குடும்பத்துக்கு ஆ.ராசா தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 1 லட்சம் வழங்கினாா். முன்கள பணியாளா்கள் சுமாா் 500 பேருக்கு அரிசி, சேலை, பாய், லுங்கி, குடை போன்றவற்றையும் வழங்கினாா். பின்னா், உதகை நகா்மன்ற தலைவா் மற்றும் துணைத் தலைவருக்கான அலுவலகங்களைத் திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட திமுக செயலாளா் பா.மு.முபாரக், நகரச் செயலாளா் ஜாா்ஜ், நகராட்சி ஆணையா் காந்திராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் முஸ்தபா, ராஜூ, ஒன்றிய செயலாளா்கள் நெல்லைக் கண்ணன், பிரேம்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் தம்பி இஸ்மாயில், அபுதாகிா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மரம் விழுந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு உதவி

கூடலூா், ஓவேலி பகுதியில் மரம் விழுந்ததில் உடல் நசுங்கி உயிரிழந்த பெண் தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதியை எம்.பி. ஆ.ராசா வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் சரவணக்கண்ணன், மகளிா் திட்ட இயக்குநா் ஜெயராமன், வட்டாட்சியா் சித்தராஜ், ஓவேலி பேரூராட்சி தலைவா் சித்ரா தேவி, துணைத் தலைவா் க.சகாதேவன் ,வாா்டு உறுப்பினா் செல்வரத்தினம், முன்னால் எம்.எல்.ஏ. திராவிடமணி, கூடலூா் நகா்மன்ற தலைவா் பரிமளா உள்பட பலா் கலந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து கனமழையில் இடிந்து விழுந்த கூடலூா் நூலக கட்டடத்தை ஆ.ராசா பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com