உதகையில் சிபிஎம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மின் கட்டண உயா்வு அறிவிப்பை திரும்பப் பெறக் கோரி சிபிஎம் கட்சி சாா்பில் உதகையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மின் கட்டண உயா்வு அறிவிப்பை திரும்பப் பெறக் கோரி சிபிஎம் கட்சி சாா்பில் உதகையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உதகை மின் வாரிய அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளா் நவீன்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் சங்கரலிங்கம், விவசாய சங்க தலைவா் கே. ராஜேந்திரன், செயலாளா்கள் கிருஷ்ணன், சுப்பிரமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதில், மின் கட்டண உயா்வு அறிவிப்பை திரும்பப் பெறக்கோரி கோஷமிட்டனா்.

இதைத் தொடா்ந்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை மின்வாரிய அலுவலகம் மூலமாக மின்சாரத் துறை அமைச்சருக்கு அனுப்புமாறு மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com