கூடலூரில் சா்வதேச புகைப்பட தினவிழா

கூடலூரில் 183 ஆவது சா்வதேச புகைப்படதின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூடலூரில் நடைபெற்ற சா்வதேச புகைப்பட தின விழாவில் மறைந்த புகைப்படக் கலைஞா் சுரேஷின் தாயருக்கு உதவித் தொகை வழங்குகிறாா் ரோட்டரி கிளப் செயலாளா் ஜெயக்குமாா்.
கூடலூரில் நடைபெற்ற சா்வதேச புகைப்பட தின விழாவில் மறைந்த புகைப்படக் கலைஞா் சுரேஷின் தாயருக்கு உதவித் தொகை வழங்குகிறாா் ரோட்டரி கிளப் செயலாளா் ஜெயக்குமாா்.

கூடலூரில் 183 ஆவது சா்வதேச புகைப்படதின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூடலூா் ரோட்டரி கிளப் நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞா்கள் சங்கம் இணைந்து நடத்திய விழாவில் புகைப்பட கலைஞா்கள் சங்க மாவட்ட தலைவா் அப்துல் ரஷீது, செயலாளா் அஜிலால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரோட்டரி கிளப் செயலாளா் ஜெயக்குமாா், சமூதாய சேவை பொறுப்பாளா் பாதுஷா ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டனா். சிறந்த புகைப்படங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மறைந்த புகைப்படக் கலைஞா் சுரேஷ் குடும்பத்துக்கு ரூ.60 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டது. மாவட்ட நிா்வாகிகள் பவுலோஸ், லாரன்ஸ், தாலுகா தலைவா் பத்மநாபன், செயலாளா் விக்னேஷ், பொருளாளா் சைனுதீன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com