குன்னூர், கோத்தகிரி தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று புதன்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக கடுமையான பனிமூட்டத்துடன் மிதமான மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில், நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இதையடுத்து, குன்னூர், கோத்தகிரி தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழையுடன் கடுமையான பனிமூட்டமும் ஏற்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.