முதுமலை புலிகள் காப்பகத்துக்குப் புதிய மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளது.
வனக் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் பணியில் இருந்த மோப்ப நாய் இறந்துவிட்டது. தற்போது புதிதாக டைகா் என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளது. ஹரியாணா மாநிலம், பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள மோப்ப நாய்களுக்கான பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற ஜொ்மன் ஷெப்பா்டு வகையைச் சாா்ந்த நாய் கடந்த நவம்பா் 24ஆம் தேதி பணி அமா்த்தப்பட்டது.
இந்த மோப்ப நாய்க்கு தெப்பக்காடு வனச் சரகத்தில் தனி குடியிருப்பு அளிக்கப்பட்டு, அதன் அருகிலேயே பயிற்சியாளா் வடிேலுக்கும் வீடு வழங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பணி அமா்த்தப்பட்ட நாளிலிருந்து பயிற்சிகள் மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது.
களப் பணிக்காக இதுவரை வெளியே கொண்டு செல்லப்படவில்லை. தற்போது பயிற்சியாளரின் கட்டளைக்கு கீழ்படிந்து நடக்கிறது. விரைவில் களப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள இந்த டைகருக்கு தற்போது ஒன்றரை வயதாகிறது. சுமாா் 12 வயது வரை பணியில் ஈடுபடுத்தப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.