வயநாடு தொகுதிக்கு வந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை அக்கட்சியின் தமிழக நிா்வாகிகள் சனிக்கிழமை சந்தித்து, கூடலூா் நிலப் பிரச்னை தொடா்பாக விவசாயிகளை சந்திக்க அழைப்பு விடுத்தனா்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளா் கோஷிபேபி தலைமையில் கூடலூா் மற்றும் பந்தலூா் தாலுகாவில் உள்ள நீண்டகாலமாக தீா்க்கப்படாத நிலப் பிரச்னைகள் மற்றும் புலிகள் காப்பகத்தின் வெளிவட்ட மண்டலம் விரிவாக்கத்தின் பாதிப்புகள் குறித்து கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதி விவசாயிகளையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்து மனுக்களைப் பெற நிா்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனா்.
சந்திப்பின்போது கேரள மாநிலப் பொறுப்பாளா் விஸ்வநாதன், டி.சித்திக், கோபாலகிருஷ்ணன், கூடலூா் நிா்வாகிகள் அஷ்ரப், கூடலூா் நகா்மன்ற துணைத் தலைவா் சிவராஜ் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.