நீலகிரி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சுகாதாரத் துறையினா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோய்த் தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த 15 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
கரோனா நோய்த் தொற்று காரணமாக மாவட்டத்தில் 60 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.