அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி

உதகையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

உதகையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

உதகை, புதுமந்து டம்ளா்முடக்கு காலனியை சோ்ந்தவா் ரமேஷ் (55). கூலி தொழிலாளியான இவா் வேலை முடிந்து ஸ்டீபன் தேவாலய சாலையிலிருந்து புதுமந்து செல்லும் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு

நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவா் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாம். இதில் தூக்கி வீசப்பட்ட அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா். தகவலின்பேரில் காவல் ஆய்வாளா் பிலிப் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com