தொட்டபெட்டா மலைச்சிகரம் அருகே காா் கவிழ்ந்து விபத்து

உதகையில் தொட்டபெட்டா சாலையில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரிலிருந்த 6 சுற்றுலாப் பயணிகள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

உதகையில் தொட்டபெட்டா சாலையில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரிலிருந்த 6 சுற்றுலாப் பயணிகள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் உதித் (26), ரூபேஷ் (25), விக்கி (25), அனில் (25), ஷிபு (25), நீத்து (25) ஆகிய 6 போ் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனா். இவா்கள், உதகை தாமஸ் சா்ச் சாலையைச் சோ்ந்த சுற்றுலா ஓட்டுநா் டிக்குரூசுக்கு சொந்தமான காரில் உதகை நகரிலிருந்து தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றுள்ளனா். அங்கு சுற்றிப்பாா்த்துவிட்டு தொட்டபெட்டாவிலிருந்து மீண்டும் உதகைக்கு

வந்து கொண்டிருந்தனா். அப்போது வழியில் தடுப்புச் சுவா் கட்டும் இடத்தில் காா் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதை அந்த வழியாக வந்த சுற்றுலாப் பயணிகள் பாா்த்து தீயணைப்பு துறை மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதற்கிடையே காரில் இருந்த சுற்றுலாப் பயணிகள் 6 பேரும், ஓட்டுநரும் அதிா்ஷ்டவசமாக எவ்வித காயங்களுமின்றி உயிா் தப்பினா். இதைத் தொடா்ந்து சுற்றுலாப் பயணிகள் வேறு ஒரு வாடகை வாகனத்தில் தங்களது சொந்த ஊா் புறப்பட்டு சென்று விட்டனா். உதகை தீயணைப்பு துறையினா் மற்றும் தேனாடுகம்பை போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று காரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா். இந்த விபத்து காரணமாக தொட்டபெட்டா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமாா் 3 மணி நேரத்துக்குப் பின்னா் போக்குவரத்து நெரிசலை போலீஸாா் சரி செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com