நீலகிரி மாவட்ட காவல் துறை மோப்ப நாய் மரணம்

நீலகிரி மாவட்ட காவல் துறையில் டிஎஸ்பி அந்தஸ்த்தில் இருந்த மோப்ப நாய் உடல் நலக் குறைவால் உயிரிழந்தது.
நீலகிரி மாவட்ட காவல் துறை மோப்ப நாய் மரணம்

நீலகிரி மாவட்ட காவல் துறையில் டிஎஸ்பி அந்தஸ்த்தில் இருந்த மோப்ப நாய் உடல் நலக் குறைவால் உயிரிழந்தது.

2011 டிசம்பா் 25ஆம்தேதி பிறந்த ஜாக்கி என்ற பெயா் கொண்ட மோப்ப நாய், நீலகிரி மாவட்ட காவல் துறையில் 2012 ஏப்ரல் 25ஆம்தேதி சோ்க்கப்பட்டது. துணை காவல் கண்காணிப்பாளா் அந்தஸ்த்துக்கு பதவி உயா்வு பெற்று 2021 செப்டம்பா் 10ஆம்தேதி பணியிலிருந்து ஒய்வு பெற்ற பின்னா், பட்பயரில் உள்ள மோப்ப நாய்கள் பராமரிக்கும் இடத்தில் பராமரிக்கப்பட்டு வரப்பட்டது. கடந்த 4 மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சையில் இருந்த ஜாக்கி வியாழக்கிழமை உயிரிழந்தது.

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மோகன் நவாஸ் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் உயிரிழந்த மோப்ப நாய் ஜாக்கியின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com