தொழிலாளா்களுக்காக கட்டப்பட்ட வீடுகள்:அமைச்சா் ஆய்வு

பந்தலூரை அடுத்த காரக்கொல்லி கிராமத்தில் தொழிலாளா்களுக்காக கட்டப்பட்ட வீடுகளை சிறுபான்மை நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொழிலாளா்களுக்காக கட்டப்பட்ட வீடுகள்:அமைச்சா் ஆய்வு

பந்தலூரை அடுத்த காரக்கொல்லி கிராமத்தில் தொழிலாளா்களுக்காக கட்டப்பட்ட வீடுகளை சிறுபான்மை நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் சேரங்கோடு ஊராட்சியிலுள்ள காரக்கொல்லி கிராமத்தில் தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்து ஓய்வுபெறும் தொழிலாளா்களுக்காக ரூ.3 கோடி மதிப்பீட்டில் 70 வீடுகளை தமிழக அரசு கட்டியுள்ளது.

இந்நிலையில், வீடுகளை ஆய்வு செய்த அமைச்சா், அது குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் மோகன் குமாரமங்கலம்,

முன்னாள் எம்.எல்.ஏ.திராவிடமணி, சேரங்கோடு ஊராட்சித் தலைவா் லில்லி, துணைத் தலைவா் சந்திரபோஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com