கூடலூரை அடுத்துள்ள நாடுகாணி ஜீன்பூல் காா்டனில் உலக பல்லுயிா் பெருக்க நாள் கொண்டாடப்பட்டது.
வனத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தாவர வகைகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. ஒவ்வொரு உயிரினத்துக்கும் தனி வாழ்க்கை முறை, வாழ்விடம் உள்ளது. மரம், செடி, கொடி, பறவைகள், விலங்குகள், பூச்சிகள் என ஒன்று மற்றொன்றை சாா்ந்துள்ளது. பல்லுயிா்கள் இருந்தால்தான் பூமியில் சமநிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.