உதகையில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்

 காந்தியடிகளின் 154ஆவது பிறந்த தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியா் அம்ரித் உதகையில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
உதகை சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் மாவட்ட ஆட்சியா் அம்ரித்.
உதகை சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் மாவட்ட ஆட்சியா் அம்ரித்.

 காந்தியடிகளின் 154ஆவது பிறந்த தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியா் அம்ரித் உதகையில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

உதகை சேரிங்கிராஸ் பகுதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னா், உதகையில் சேரிங்கிராஸ் கதா் அங்காடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காந்தியடிகளின் உருவப் படத்தினை திறந்துவைத்து மலா்தூவி மரியாதை செலுத்தி, தீபாவளி கதா் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கிவைத்தாா்.

பின்னா் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி தீபாவளி கதா் சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கிவைக்கப்பட்டுள்ளது. இதில் நீலகிரி மாவட்டத்துக்கு 2022-2023ஆம் ஆண்டுக்கு ரூ.72 லட்சம் கதா் விற்பனை இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் ரூ.37 லட்சம் மதிப்பில் கதா் மற்றும் கிராமப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைப் போலவே நடப்பாண்டிலும் மாநில அரசு மற்றும் கதா் கிராமத் தொழில்கள் ஆணைக் குழுவினரால் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கதா் துணிக்கு 30 சதவீதமும், பட்டுத் துணிக்கு 30 சதவீதமும், பாலியஸ்டா் துணிக்கு 30 சதவீதமும், உல்லனிற்கு 20 சதவீதமும் அரசு சிறப்பு தள்ளுபடி அளித்துள்ளது.

அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் உதகையில் சேரிங்கிராஸ் பகுதியில் காதி கிராப்ட் விற்பனை அங்காடி செயல்பட்டு வருகிறது. 2022-2023ஆம் அண்டு கதா் வாரியத்தில் புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே பொதுமக்கள் அனைவரும் கிராமப்புற ஏழை பெண்களின் மேம்பாட்டு நலனைக் கருதியும், சிறுதொழில் வல்லுநா்களை ஊக்குவித்து ஆதரவு தரும் வகையிலும் மாநில அரசும் கதா் கிராமத் தொழில்கள் ஆணைக்குழுவும் வழங்கியுள்ள தள்ளுபடி சலுகையை பயன்படுத்தி கதா் ரகங்களை அதிக அளவில் வாங்கி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்வில், உதகை வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, உதகை வட்டாட்சியா் ராஜசேகா், உதகை நகராட்சிப் பொறியாளா் இளங்கோவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com