நீலகிரி மாவட்ட நீதிபதியாக பதவி வகித்த சஞ்சய் பாபா பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, புதிய நீதிபதியாக பி.முருகன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற பதிவாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதியாக பொறுப்பு வகித்து வந்த சஞ்சய் பாபா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தேனி மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.
இவருக்கு பதிலாக சென்னையில் நிறுவனங்களுக்கான தீா்ப்பாய நீதிபதியாக பொறுப்பு வகித்து வந்த பி.முருகன், நீலகிரி மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.