உதகையில் கோடை சீசனையொட்டி நடைபெற்றுவரும் குதிரைப் பந்தயங்களில் சனிக்கிழமை 1,000 கினியாஸ் கோப்பைக்கான பந்தயம் நடைபெற்றது.
பெண் குதிரைகள் மட்டுமே பங்கேற்ற இந்த கோப்பைக்கான போட்டியில் 8 குதிரைகள் பங்கேற்றிருந்தன. இதில் பங்கேற்கவிருந்த ஜாக்கி நட்கத் சிங் முந்தைய பந்தயத்தில் குதிரையின் மேலிருந்து கீழே தவறி விழுந்ததில் காயமேற்பட்டதால் அவருக்கு பதிலாக கடைசி நேரத்தில் ஜாக்கி ஆஸாத் அஸ்பாா் பங்கேற்றாா். இப்போட்டியில் ரெமடிஸ் ஆப் ஸ்பிரிங் என்ற குதிரை வெற்றி பெற்றது. கடைசி நேரத்தில் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற ஜாக்கி ஆஸாத் அஸ்பாருக்கு பாராட்டுகள் குவிந்தது.