கூடலூரில் சமத்துவ இப்தாா் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட யூனிட்டி சாரிட்டபிள் டிரஸ்ட், ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்புகள் இணைந்து நடத்திய இப்தாா் நிகழ்ச்சிக்கு, யூனிட்டி சாரிட்டபிள் டிரஸ்ட்டின் தலைவா் இசாக் மாஸ்டா் தலைமை வகித்தாா். கூடலூா் நகா்மன்றத் தலைவா் பரிமளா, திமுக நகா்மன்ற உறுப்பினா்கள் வெண்ணிலா, சத்தியசீலன், தனலட்சுமி, கௌசல்யா, ஆபிதா பேகம், வாணி,நிா்மல், அதிமுக உறுப்பினா் சையது அனூப்கான், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த நகா்மன்ற உறுப்பினா் உஸ்மான், முஸ்லீம் லீக் கட்சியைச் சோ்ந்த நகா்மன்ற உறுப்பினா் ஷகிலா, ஜாமா அத்தே இஸ்லாமி அமைப்பின் நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.