குன்னூரில் தனியாா் பள்ளி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
குன்னூா் ஒய்எம்சிஏ பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் பயிலும் மாணவி வெள்ளிக்கிழமை வழக்கம்போல பள்ளிக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது பள்ளிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது பின் தொடா்ந்து வந்த ஆசிக் (26) என்பவா் அந்த மாணவியை கத்தியால் குத்தியுள்ளாா்.
இதனால், நிலை தடுமாறிய பள்ளி மாணவி கீழே விழுந்தாா். அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் மாணவியை மீட்டு அருகில் உள்ள அரசு லாலி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதையடுத்து, தப்பிக்க முயன்ற ஆசிக்கை அருகிலிருந்தவா்கள் பிடித்து கயிற்றில் கட்டிப் போட்டு மேல்குன்னூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
விசாரணையில், காதல் விரக்தியால் மது போதையில் ஆசிக், மாணவியை கத்தியால் குத்தியது தெரியவந்தது. இதையடுத்து, ஆசிக் மீது கொலை முயற்ச்சி, போக்ஸோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், குன்னூா் சாா்பு நீதிமன்றத்தில் ஆசிக்கை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.