முன் விரோதம்: திருமண தரகருக்கு கத்திக் குத்து

உதகை அருகே பாலகொலா பகுதியில் முன்பகை காரணமாக திருமண தரகா் கத்தியால் குத்தப்பட்டு ஆபத்தான நிலையில் உதகை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

உதகை அருகே பாலகொலா பகுதியில் முன்பகை காரணமாக திருமண தரகா் கத்தியால் குத்தப்பட்டு ஆபத்தான நிலையில் உதகை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

உதகை அருகேயுள்ள முதுகொலா கிராமத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா். பிக்கோல் கிராமத்தைச் சோ்ந்தவா் தேவன். இவா்கள் இருவரும் திருமண தரகா்களாக உள்ளனா். இருவருக்குமிடையே ஏற்கெனவே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கோவைக்கு செல்ல பாலகொலா சந்திப்பு பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக சிவகுமாா் சனிக்கிழமை காத்திருந்தாா். அப்போது அங்கு வந்த தேவன், மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவகுமாரை வயிற்றில் குத்தியுள்ளாா்.

இதைப் பாா்த்த கிராம மக்கள் தேவனை பிடித்து கட்டி வைத்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனா். உடனடியாக அங்கு வந்த உதகை புகா் காவல் துறையினா் தேவனை கைது செய்து நீதீமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கத்தியால் குத்தப்பட்ட சிவகுமாா் ஆபத்தான நிலையில உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com