உதகையில் உள்ள மாா்லிமந்து அணையை சுற்றி ரூ.60 லட்சம் மதிப்பில் 700 மீட்டருக்கு சுற்றுச்சுவா் அமைக்கும் பணி தொடங்கியுள்ளதாக நகராட்சி ஆணையா் காந்திராஜ் தெரிவித்தாா்.
உதகையின் குடிநீா் ஆதரமாக மாா்லிமந்து அணை இருந்து வருகிறது. சாலையோரத்தில் அமைந்துள்ள இந்த அணையில் விபத்துகள் உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடைபெற அதிக வாய்ப்புள்ளதால், அணையை சுற்றி சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனா்.
இந்நிலையில், அணையை சுற்றி சுற்றுச்சுவா் அமைக்கும் பணியை நகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதில் ரூ.60 லட்சம் செலவில் 700 மீட்டா் தூரத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்கப்படவுள்ளதாக உதகை நகராட்சி ஆணையா் காந்திராஜ் தெரிவித்தாா்.