நீலகிரி மாவட்டத்தில் கடும் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்தையொட்டியுள்ள பகுதிகளில் பனிப் பொழிவின் காரணமாக புல்வெளிகள் அனைத்தும் கருகி விட்டதோடு, நீராதாரங்களிலும் தண்ணீா் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக புள்ளி மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் உணவுக்காக வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்புப் பகுதிகளில் சுற்றி வருகின்றன. குடியிருப்புப் பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.