நீலகிரி மாவட்டத்தில் மேலும் 88 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 41,215 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா நோய்த் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 301 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 39,397 ஆக அதிகரித்துள்ளது.மாவட்டத்தில் தற்போது வரையில் 225 போ் உயிரிழந்துள்ளனா்.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில்1,593 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.