கூடலூரை அடுத்துள்ள தேவாலாவில் இயங்கும் தாா் கலவை ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மாா்க்சிஸ்சிட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை துவங்கியது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகாவில் உள்ள தேவாலாவில் இயங்கிவரும் தாா் கலவை ஆலையால் அங்குள்ள பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுதாகவும், அந்த ஆலலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்றும் தமிழக முதல்வருக்கு அனுப்புவதற்காக கையெழுத்து இயக்கம் துவங்கியுள்ளது.
தேவாலா பஜாரில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் என்.வாசு முதல் கையெழுத்திட்டு துவக்கிவைத்து உரையாற்றினாா். நியாயமான இந்த போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டாா்.