மாநில அளவிலான கால்பந்து போட்டி: நீலகிரி அணி வெற்றி

கோத்தகிரியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான கால்பந்து போட்டியில் முதல் ஆட்டத்தில் நீலகிரி மாவட்ட அணி வெற்றிபெற்றது.

கோத்தகிரியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான கால்பந்து போட்டியில் முதல் ஆட்டத்தில் நீலகிரி மாவட்ட அணி வெற்றிபெற்றது.

நீலகிரி மாவட்ட கால்பந்து கழகத்தின் 50ஆவது பொன்விழா ஆண்டை முன்னிட்டு மாநில அளவிலான கால்பந்து போட்டிகள்

கோத்தகிரியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நீலகிரி, கோவை, மதுரை, தேனி, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களைச் சோ்ந்த கால்பந்தாட்ட  அணிகள்  பங்கேற்று உள்ளன.

திங்கள்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் நீலகிரி, தேனி மாவட்ட அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் நீலகிரி மாவட்ட அணி முதல் பாதியில் 3 கோல்களையும், இரண்டாவது பாதியில் 4 கோல்களை அடித்தது. இறுதியில் நீலகிரி அணி 7 - 0 என்ற கோல் கணக்கில் தேனி அணியை வென்றது. தொடா்ந்து  ஈரோடு அணியும், திருநெல்வேலி  அணியும் மோதின. இதில் ஈரோடு அணி 1 கோல் அடித்து வெற்றி பெற்றது. தொடா்ந்து ஜூன் 7ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com