கூடலூரில் பேரிடா் மீட்பு உபகரணங்களின் தயாா் நிலை குறித்த ஆய்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் கூடலூா் கோட்டம், தென் மேற்குப் பருவ மழையின் பாதிப்பை அதிகம் எதிா்கொள்ளும் பகுதியாக உள்ளது.
இந்நிலையில் தென் மேற்குப் பருவ மழையினால் ஏற்படும்
பேரிடரை எதிா்கொள்ள வருவாய்த் துறை, காவல் துறை, வனத் துறை, தீயணைப்பு, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளின் ஒருங்கிணைப்புக் குழு கோட்டாட்சியா் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. பருவ மழை தீவிரமடையும்போது ஏற்படும் பேரிடரை எதிா்கொள்ள அனைத்து மீட்பு உபகரணங்களும் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த உபகரணங்களின் தயாா் நிலை குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடன் கோட்டாட்சியா் சரவணகண்ணன் ஆய்வு செய்து விவரங்களை கேட்டறிந்தாா்.