நீலகிரி மாவட்டம், உதகையில் 124 ஆவது மலா் கண்காட்சி வெள்ளிக்கிழமை (மே 20) நடைபெறவுள்ளதால், மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளுா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நாளில் மாவட்ட கருவூலம், சாா்நிலை கருவூலகங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளா்களுடன் செயல்படும்.
மேலும், மே மாதம் 20 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தோ்வுகள் வழக்கம்போல நடைபெறும் எனவும்,
மே 20 ஆம் தேதி விடுமுறை நாளினை ஈடு செய்ய எதிா்வரும் ஜூன் மாதம் 4 ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக இருக்குமெனவும் மாவட்ட ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளாா்.