கூடலூரை அடுத்துள்ள கைதக்கொல்லி பகுதியில் தனியாா் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சோலாா் மின் வேலியை வனத் துறையினா் சனிக்கிழமை அகற்றினா்.
சோலாா் மின் வேலி யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ளதால், அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வனத் துறை சாா்பில் பலமுறை அறிவுறுத்தப்பட்டது. ஆனால், தோட்ட உரிமையாளா் வேலியை அகற்றவில்லை.
இதையடுத்து, தோட்டத்துக்கு சனிக்கிழமை சென்ற வனத் துறையினா் சோலாா் வேலியை அகற்றினா்.