உதகையில் தெரு நாய்கள் கடித்ததில் புள்ளி மான் உயிரிழந்தது.
உதகை அருகேயுள்ள வனப் பகுதியிலிருந்து புள்ளி மான் வழி தவறி உதகை நகரப் பகுதிக்குள் திங்கள்கிழமை இரவு புகுந்தது. பொதுமக்கள் நடமாட்டத்தைக் கண்டு மிரண்டு போன மான் அங்குமிங்கும் ஓடியது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த தெரு நாய்கள் அந்த மானை விரட்டிச் சென்று கடித்துக் குதறின. இதில் மான் படுகாயம் அடைந்தது. அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில், வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து மானை மீட்டனா். ஆனால் சற்று நேரத்தில் அந்த மான் உயிரிழந்தது.
இதையடுத்து மானின் உடல், உதகை அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வன விலங்குகளின் உணவுக்காக வனப்பகுதியில் விடப்பட்டது.