உதகை எல்க் ஹில் முருகன் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம்

உதகை  எல்க் ஹில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா தேரோட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரபாகரன்  ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

உதகை  எல்க் ஹில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா தேரோட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரபாகரன்  ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

 உதகை  எல்க் ஹில் பகுதியில் மலை நடுவே 40 அடி உயரத்தில் முருகன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம் மற்றும் வைகாசி விசாகத்தையொட்டி திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

நடப்பு ஆண்டு தைப்பூசத் திருவிழாவை ஒட்டி தேரோட்டம் நடைபெற்றது. உதகை லோயா் பஜாா், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக தோ் திருவீதி உலா வந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து  ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com