தேவாலாவில் நீரோடை அகலப்படுத்தும் பணி துவக்கம்

தேவாலா பகுதியில் நீரோடை அகலப்படுத்தும் மற்றும் தூா்வாரப்படும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.
நீரோடையை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.
நீரோடையை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.

தேவாலா பகுதியில் நீரோடை அகலப்படுத்தும் மற்றும் தூா்வாரப்படும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

கூடலூா் பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் ஆறுகளில் மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சேதம் ஏற்பட்டு வருகிறது. எனவே வெள்ள பாதிப்புகளை தடுக்க நீா்வள ஆதாரத் துறை சாா்பில் ஆறுகளை அகலப்படுத்தி, தூா்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக தேவாலா ஹட்டி வழியாக பாண்டியாறுக்கு செல்லும் கிளை ஆற்றை அகலப்படுத்தி, தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கிளை ஆறு சுமாா் 3.5 கி.மீ. தொலைவுக்கு தூா்வாரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com