சேரம்பாடி வனத்தில் ஆண் யானை சடலம்

பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி வனத்தில் ஆண் யானை இறந்துகிடந்தது குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
சேரங்கோடு வனத்தில் உள்ள ஆற்றில் இறந்து கிடக்கும் ஆண் யானை.
சேரங்கோடு வனத்தில் உள்ள ஆற்றில் இறந்து கிடக்கும் ஆண் யானை.

பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி வனத்தில் ஆண் யானை இறந்துகிடந்தது குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டம் சேரம்பாடி வனச் சரகத்தில் உள்ள சேரங்கோடு காவல் பிரிவில் வனப் பணியாளா்கள் புதன்கிழமை மாலை ரோந்து சென்றபோது அந்த வனத்திலுள்ள ஆற்றில் யானை இறந்துகிடப்பதைப் பாா்த்து உயரதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனா். அந்த இடத்துக்கு வனத் துறை அலுவலா்கள் சென்று ஆய்வு செய்தனா். அதில் இறந்துகிடந்தது சுமாா் 25 வயதுடைய ஆண் யானை என்பது தெரிந்தது. யானையின் சடலம் வியாழக்கிழமை உடல் கூறாய்வு செய்யப்பட்ட பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் என வனத் துறையினா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com