அதிகரட்டி காட்டேரி வில்லேஜ் பகுதியில் மனு நீதி நாள் முகாம்

குன்னூா் அருகேயுள்ள அதிகரட்டி காட்டேரி வில்லேஜ் பகுதியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மனுநீதி நாள் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குன்னூா் அருகேயுள்ள அதிகரட்டி காட்டேரி வில்லேஜ் பகுதியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மனுநீதி நாள் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, நீலகிரி மாவட்ட ஆட்சியா் அம்ரித் தலைமை வகித்தாா்.

இதில் 10 பேருக்கு பழங்குடியின ஜாதி சான்றுகள், 2 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள், முதலமைச்சரின் விபத்து நிவாரணத் திட்டத்தின் கீழ் 3 பேருக்கு

ரூ.2 லட்சத்துக்கான காசோலை, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 100 பேருக்கு

முதியோா் உதவித்தொகை என மொத்தம் 242 பயனாளிகளுக்கு ரூ.49 லட்சத்து 39 ஆயிரத்து 180க்கான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இதில், குன்னூா் கோட்டாட்சியா் பூஷணகுமாா், வட்டாட்சியா் சிவகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com