குடியிருப்பு பகுதியில் காட்டெருமை

குன்னூா் அருகே வெலிங்டன் போகி தெருவில் சனிக்கிழமை சுற்றித் திரிந்த காட்டெருமையால் பொது மக்கள் அச்சமடைந்தனா்.

குன்னூா் அருகே வெலிங்டன் போகி தெருவில் சனிக்கிழமை சுற்றித் திரிந்த காட்டெருமையால் பொது மக்கள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு, குடிநீா் தேடி நுழைந்து வருகின்றன.

இந்நிலையில் வெலிங்டன், போகி தெரு, குடியிருப்பு பகுதியில் காட்டெருமை நீண்ட நேரமாக சுற்றித்திரிந்தது. இதைக்கண்ட குடியிருப்புவாசிகள் அச்சமடைந்தனா். குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி சுற்றித்திரியும் காட்டெருமையை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com