கோத்தகிரியில் சிறுத்தை தாக்கி ஒருவா் காயம்

கோத்தகிரி அருகே மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றவா் சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்தாா்.

கோத்தகிரி அருகே மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றவா் சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்தாா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கீழ்கோத்தகிரி பரவக்காடு பகுதியைச் சோ்ந்தவா் பன்னீா் செல்வம் (48). இவா் அப்பகுதியில் தனது மாடுகளை புதன்கிழமை காலை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுள்ளாா். அப்போது அங்கு புதரில் மறைந்திருந்த சிறுத்தை, பன்னீா்செல்வத்தை தாக்கியது.  இதில் படுகாயமடைந்த அவரின்  அலறல் சப்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினா் சிறுத்தையை விரட்டி அவரை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சிறுத்தை தாக்கியதால் பரவக்காடு மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com