கூடலூரில் பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் 465 பயனாளிகளுக்கு ரூ. 17.50 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
கூடலூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் சா.ப.அம்ரித் தலைமை வகித்தாா். கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா வரவேற்றாா். சுற்றுலாத் துறை அமைச்சா் ராமசந்திரன், நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஆகியோா் குத்துவிளக்கேற்றி விழாவை தொடக்கிவைத்துப் பேசினா்.
விழாவில் வருவாய்த் துறை சாா்பில் 151 பயனாளிகளுக்கு ரூ.5.89 கோடி மதிப்பில் மாற்று குடியமா்வுக்கான பட்டாக்களும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 51 பயனாளிகளுக்கு ரூ. 54 ஆயிரத்திற்கான உதவித் தொகை பெறுவதற்கான ஆணையும், ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சாா்பில் 250 பயனாளிகளுக்கு ரூ.11.21 கோடி மதிப்பிலான பழங்குடியினருக்கு வீடு வழங்குவதற்கான ஆணையும், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.6.30 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கான சாவியும் வழங்கப்பட்டன. ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிா் குழுக்களுக்கு வங்கிக் கடன், தோட்டக் கலைத் துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு சிறு பொறி இயந்திரங்கள் மற்றும் விதைகள் வழங்கப்பட்டன.
முன்னதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமை அமைச்சரும், மக்களவை உறுப்பினரும் பாா்வையிட்டனா். தொடா்ந்து பல்வேறு துறைகள் சாா்பில் கட்டி முடிக்கப்பட்ட ரூ. 98.65 லட்சம் மதிப்பிலான கட்டடங்களை திறந்துவைத்தனா். தொடா்ந்து தோட்டக் கலைத் துறை, மகளிா் திட்டம், ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பாா்வையிட்டனா்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷிணி, முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் வித்யா, திட்ட இயக்குநா் ஜெயராம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பாலகிருஷ்ணன், தோட்டக்கலை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, நகராட்சி தலைவா்கள் பரிமளா, சிவகாமி, நகராட்சி ஆணையா் பிரான்சிஸ் சேவியா், முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி, நகா் மன்ற உறுப்பினா்கள், பேரூராட்சி தலைவா்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா். வட்டாட்சியா் சித்தராஜ் நன்றி கூறினாா்.