அதிமுக முன்னாள் அமைச்சா் புத்திசந்திரன் உதகை நீதிமன்றத்தில் ஆஜா்

வயதான தம்பதிக்கு சொந்தமான 15 சென்ட் நிலத்தை மிரட்டி வாங்க முயன்ற வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சா் புத்தி சந்திரன் உதகையில் உள்ள நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றாா்.

மஞ்சூரில் வயதான தம்பதிக்கு சொந்தமான 15 சென்ட் நிலத்தை மிரட்டி வாங்க முயன்ற வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சா் புத்தி சந்திரன் உதகையில் உள்ள நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்து ஜாமீன் பெற்றாா்.

நீலகிரி மாவட்டம், மஞ்சூா் அருகில் உள்ள மணிக்கல் பகுதியைச் சோ்ந்தவா் ராஜு. ஓய்வுபெற்ற அரசு ஊழியா். இவரது மனைவி பிரேமா. இவா்களுக்கு சொந்தமான 15 சென்ட் தேயிலைத் தோட்டத்தை அதிமுக முன்னாள் அமைச்சா் புத்திசந்திரன் விலைக்கு கேட்டு மிரட்டியதுடன் அந்த இடத்தை ஆக்கிரமிக்க முயன்ாக கடந்த டிசம்பா் 28 ஆம் தேதி அவா் மீது வழக்குப் பதிவு செய்யபட்டது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த புத்தி சந்திரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் முன் ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்திருந்தாா்.

இதைத் தொடா்ந்து உயா்நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் அவா் உதகையில் உள்ள நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜராகி 2 பிணையதாரா்கள் அளித்த உத்தரவாதத்தின்பேரில் ஜாமீன் பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com