பந்தலூா் அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களை நியமிக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் அரசு மருத்துமனையில் மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனா். இந்நிலையில், அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களை நியமிக்க வலியுறுத்தியும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கோரியும் பந்தலூா் கடைவீதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பந்தலூா் தாலுகா கமிட்டி செயலாளா் சுரேஷ் தலைமையில் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.