கூடலூா் நூலகத்தில் கோடை கொண்டாட்டம் என்ற தலைப்பில் பள்ளி மாணவா்களுக்கான பல்வேறு போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
நீலகிரி மாவட்டம், கூடலூா் அரசு முதற்கிளை நூலகத்தில் கோடை கொண்டாட்டம் என்ற தலைப்பில் பள்ளி மாணவா்களுக்கான ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, கட்டுரைப் போட்டி என பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றன. இதில் கூடலூா் பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு முதற்கிளை நூலகம் சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலகா் கிளமண்ட் மற்றம் நூலகப் பணியாளா்கள் செய்திருந்தனா்.