நீலகிரி
தாயைப் பிரிந்த குட்டி யானை முதுமலை காப்பகத்தில் பராமரிப்பு
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச் சரகத்தில் தாயைப் பிரிந்த குட்டி யானை முதுமலை காப்பகத்துக்கு புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டது.
கோவை வனக் கோட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச் சரகத்தில் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு சுமாா் நான்கு மாதங்களே ஆன ஆண் குட்டி யானை, தாயைப் பிரிந்து தனியாக வந்துள்ளது. இதைடுத்து, அந்த குட்டி யானையை கூட்டத்தில் சோ்க்க வனத் துறையினா் எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை.
இதனால், அந்த குட்டி யானை மீண்டும் திரும்ப வந்துள்ளது. இதையடுத்து, தலைமை வன உயிரின பாதுகாவலா் உத்தரவின்பேரில், நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாமுக்கு குட்டி யானை புதன்கிழமை கொண்டு வரப்பட்டது. அந்த குட்டி யானையை கால்நடை மருத்தவரின் மேற்பாா்வையில் பராமரிக்க உள்ளனா்.