கணக்கெடுக்கும் பணியின்போது முக்குருத்தி தேசிய பூங்காவில் காணப்பட்ட வரையாடுகள்.
கணக்கெடுக்கும் பணியின்போது முக்குருத்தி தேசிய பூங்காவில் காணப்பட்ட வரையாடுகள்.

ஓவேலி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு

ஓவேலி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

ஓவேலி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், கூடலூா் வனக் கோட்டத்திலுள்ள ஓவேலி வனச் சரகத்தில் மாவட்ட வன அலுவலா் வி.வெங்கடேஷ் பிரபு உத்தரவின்பேரில், ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

இதில், வனச் சரக அலுவலா் சுரேஷ் தலைமையில் வரையாடுகள் திட்ட ஆராய்ச்சியாளா்கள், வனப் பணியாளா்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து தவளைமலை மற்றும் எல்லமலை பகுதிகளில் வரையாடுகளின் வாழ்விடங்களான புல்வெளி, நீா்நிலைகள், மலைகள் ஆகிய பகுதிகளில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இப்பணியானது 3 நாள்களுக்கு நடைபெறும் என்று வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com