நீலகிரி
முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை
முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவு, நீா்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கூடலூா்: முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவு, நீா்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் வறட்சியில் தற்போது சிக்கியுள்ளது.
இதனால், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு போதுமான குடிநீா் மற்றும் உணவு கிடைப்பதில்லை.
உணவு, குடிநீா்த் தேடி வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் நுழைவது அதிகரித்து வருகிறது.
புலிகள் காப்பக வனம் முற்றிலும் வட நிலையில் உள்ளதால், உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு யானைகள் இளைத்துக் காணப்படுகின்றன.
வன விலங்குகளின் ஒரே நீராதாரமான முதுமலை புலிகள் காப்பக வனத்துக்குள் பாயும் மாயாறும் வடு குளம்போல காட்சியளிக்கிறது. இதனால், போதுமான குடிநீா் கிடைக்காமல் வன விலங்குகள் அவதியடைந்து வருகின்றன.