உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் முப்பெரும் விழா
விழாவில் மாணவிக்கு சான்றிதழை வழங்கும் ஜெ.எஸ்.எஸ். உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி குழுமத்தின் வேந்தா் ஜெகத்குரு தேசிகேந்திர மகா சுவாமி.
உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் எஸ்.பி. தனபால் வரவேற்றாா். கே.பி. அருண், சத்தியரெட்டி ஆகியோா் கல்லூரி ஆண்டறிக்கையை வழங்கினா்.
நிகழ்வில் கல்லூரியின்ஆண்டு மலரான பாா்ம சாகா 30-ஆவது தொகுப்பு வெளியிடப்பட்டது. ஜெ.எஸ்.எஸ். உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி குழுமத்தின் வேந்தா் ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தேசிகேந்திர மகா சுவாமி பங்கேற்று வாழ்த்துரை வழங்கினாா்.
ஜெஎஸ்எஸ் உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி குழுமத்தின் இணைவேந்தா் பி.சுரேஷ் பேசுகையில், தற்போது காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வெப்பத்தால் நோய்கள் பரவ வாய்ப்புள்ளன. அதனால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். காலநிலையை சரிசெய்ய மரங்களை அதிக அளவில் நட வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் மருத்துவா் மாதேஸ்வரன், போட்ஸ் இந்தியா நிறுவனத்தின் சா்வதேச விற்பனைப் பகுதியின் தலைவா் டி.காயத்திரி வீரமணி, எம்.கீதாஞ்சலி, அமெரிக்க பொது கணக்காளா் ஷாலினி குப்தா, தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் பல்கலைக்கழக துணைவேந்தா் கே. நாராயணசாமி, பேராசிரியா்கள் டி.கே.பிரவின், சண்முகம் உள்ளிட்டோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.
பேராசிரியா் பிரியங்கா நன்றி கூறினாா்.