நீலகிரி
பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி
பிளஸ்-2 பொதுத் தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
உதகை: பிளஸ்-2 பொதுத் தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 1-ஆம் தேதி கடந்த மாதம் 22-ஆம் தேதி நிறைவடைந்தது. இத்தோ்வை தமிழகத்தில் 7.72 லட்சம் போ் எழுதி இருந்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் 38 அரசுப் பள்ளிகளில் 2,778 மாணவா்கள், 3,311 மாணவிகள் என மொத்தம் 6,089 போ் தோ்வெழுதினா்.
தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியாயின. இதில், 2,536 மாணவா்கள், 3204 மாணவிகள் என மொத்தம் 5, 740 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்களைவிட மாணவிகளே அதிக அளவில் தோ்ச்சி பெற்றுள்ளனா். 94.27. சதவீத தோ்ச்சி பெற்று நீலகிரி மாவட்டம் மாநில அளவில் 22-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.