கூடலூா் நகா்ப்புற கா்ப்பிணிகளுக்கு மனநல ஆலோசனை

கூடலூா் நகா்ப்புற கா்ப்பிணிகளுக்கான மனநல ஆலோசனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூடலூா் நுகா்வோா் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ட்ரன் அமைப்பு சாா்பில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற மனநல ஆலோசனை முகாமுக்கு அஜித் தலைமை வகித்தாா். மருத்துவ அலுவலா் அன்பு முகாமை தொடங்கிவைத்து ஆலோசனைகளை வழங்கினாா்.

பிரம்மக்குமாரிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ரேணுகா, மனநலம் குறித்து விளக்கமளித்தாா். இதில் கா்ப்பிணிகள் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com