திருப்பூரில் மூதாட்டி ஒருவர் தனது 103ஆவது பிறந்த நாளை புதன்கிழமை கொண்டாடினார்.
திருப்பூர், கல்லூரி சாலை, அணைப்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மனைவி ராமாத்தாள் (103). இத்தம்பதிக்கு நான்கு மகள்கள், மகன் உள்ளனர். அவர்கள் வழியில் 26 பேரன், பேத்திகளும், 10 கொள்ளு பேரன், பேத்திகளும், ஒரு எள்ளு பேத்தியும் உள்ளனர்.
தற்போதும் ராமாத்தாள் ஆரோக்கியத்துடன் உள்ளார். இந்நிலையில், ராமாத்தாள் தனது 103ஆவது பிறந்த நாளைக் குடும்பத்தினருடன் புதன்கிழமை உற்சாகமாக கொண்டாடினார். அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அவரது பிறந்த நாள் விழா நடைபெற்றது. அவரது குடும்பத்தினர், அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டு ராமாத்தாளிடம் ஆசி பெற்றனர்.