நாட்டுக்கோழி வளர்ப்புக் குறித்த இலவச பயிற்சி திருப்பூரில் புதன்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து கால்நடை மருத்துவ பல்கலை. பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கால்நடை மருத்துவப் பல்கலை. பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் மாதந்தோறும் கால்நடை வளர்ப்பு குறித்து விவசாயிகள், பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி திருப்பூரில் ஜூலை 12-ஆம் தேதி (புதன்கிழமை)
நடைபெறுகிறது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்க உள்ள இப்பயிற்சியில், திருப்பூர் மற்றும் சுற்றுப்புற விவசாயிகள் பங்கேற்கலாம்.
நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள விஞ்ஞான முறைகள், வர்த்தக வாய்ப்புகள் குறித்து இப்பயிற்சியில் தெரிவிக்கப்படும். விவரங்களுக்கு 0421-2248524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.